அழகிகளுடன் கும்மாளம்-அரசு பொறியாளர் கைது!
சேலம்: ஏற்காட்டுக்கு விபச்சார அழகிகளுடன் கும்மாளமிட்டபடியே காரில் பயணித்த அரசு பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூருவில் தொடர் வெடி குண்டு வெடிப்பு காரணமாக ஏற்காடு இன்ஸ்பெக்டர் பெரியநாயகம் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரில் சில அழகிகளும், வாலிபர்கள் சிலரும் ஆபாசமான கோலத்தில் பயணித்ததை கண்டுபிடித்தனர்.
காரில் இருந்த வாலிபர்களிடம் விசாரித்தபோது, அவர்களில் ஒருவர்
சங்ககிரி டவுன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் கோவிந்தராஜ் (31) என்று தெரியவந்தது.
உடன் இருந்தவர்கள் அவரது நண்பர்களான சரவணன் (30), ரமேஷ் (30), தங்கபாஷ்யம் (25), ஷியாம் (25), பத்திரிநாத் (23), ஆகியோர் ஆவர்.
அவர்களுடன் பயணித்த விபச்சார அழகிகள் ஊர்வசி, லதா, தேவி, சத்யா, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கோவிந்தராஜ் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்களை போலீஸார் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கோவிந்தராஜ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஜாமீனில் விடுதலையாகி விட்டார்.