For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 மாத குழந்தையை அடித்து கொன்ற தந்தை கைது

By Staff
Google Oneindia Tamil News

சாத்தான்குளம்: தனது 6 மாத பிஞ்சுக் குழந்தையை அடித்துக் கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

சாத்தான்குளம் அருகேயுள்ள சவேரியர்புரத்தை சேர்ந்த இருதயம் மகன் அந்தோணிராஜ். இவருக்கும் மணப்பாடு அருகேயுள்ள ஆலந்தையை சேர்ந்த ரூபல்சியா என்பவருக்கும் திருமணமாகி ஸ்ரீனி என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது. திருமணமான நாளில் இருந்தே அந்தோணி ராஜ் தனது மனைவி மீது சந்தேகம் அடைந்து அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

இது தொடர்பாக மாலையும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஓருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த அந்தோணிராஜ் 6 மாத குழந்தையை தூக்கி கட்டில் மீது ஓங்கி அடித்தார்.

அதே இடத்தில் குழந்தை இறந்தது. தகலறிந்ததும் சாத்தான்குளம் டிஎஸ்பி காந்தி சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் அந்தோணி ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பெற்ற தந்தையே பச்சிளம் குழந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் சாத்தான்குளம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X