துபாய்-சாரத்திலிருந்து விழுந்து இந்தியர் சாவு

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில், கட்டடத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியத் தொழிலாளர் சாரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

கேரளாவைச் சேர்ந்தவர் ஷினோய் ஜார்ஜ் ((28). இவர் துபாய் மீடியா சிட்டி மற்றும் நாலேட்ஜ் சிட்டியில் பராமரிப்புப் பணியில், லஹேஜ்-சுல்தான் காண்டிராக்ட் கம்பெனி சார்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

நேற்று அவர் ஒரு கட்டடத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். உயரமான சாரத்தில் ஏறி நின்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

12 மீட்டர் உயரத்திலிருந்து அவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. ஹெல்மட் அணிந்திருந்தபோதிலும் அவரது தலையில் அடிபட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவரது உடலில் வேறு காயம் ஏதும் இல்லை.

கடந்த 2 ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்து வந்த ஜார்ஜுக்கு வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடக்கவிருந்ததாக அவருடன் தங்கியிருக்கும் தீபக் வர்கீஸ் என்பவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+