தீவிரவாதத்தை தடுக்கத் தவறியது ஏன்?: அரசுக்கு சிபிஎம் கேள்வி
டெல்லி: நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் அதைத் தடுக்கத் தவறியது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎம் பொலிட்பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரவாதம் தொடர்ந்து பாதித்து வருகிறது. தாக்குதல்கள், வெடிகுண்டுச் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன. ஆனால் இத்தனைக்கும் பிறகும் தீவிரவாதத்தை தடுக்க மத்திய அரசு தவறி விட்டது. தீவிரவாதிகளை வேரறுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அது ஏன் என்பதை அரசு விளக்க வேண்டும்.
நமது நாட்டின் புலனாய்வு மற்றும் உளவுப் பிரிவுகள் பலவீனமடைந்து விட்டனவா என்பதையும் அரசு விளக்க வேண்டும். உளவுப் பிரிவுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு என்னவாயிற்று என்பதையும் விளக்க வேண்டும்.
அகமதாபாத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. நாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் தீவிரவாத கட்டமைப்புகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதன்மூலம் மத கலவரத்ைத தூண்ட அவை திட்டமிடுகின்றன.
அகமதாபாத்தில் இரு மருத்துவமனைகள் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவையும் தீவிரவாதிகள் விட்டு வைக்கவில்லை. இதன் மூலம் அவர்களின் இரக்கமற்ற, கொடூர மனப்பான்மை தெரிய வருகிறது.
முதலில் ஜெய்ப்பூர், பின்னர் பெங்களூர், அடுத்த நாளே அகமதாபாத் என தீவிரவாதிகள் சுதந்திரமாக தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
மக்கள் அமைதி காத்து, வெளிநாட்டு சக்திகளின் சதிச் செயல் பலித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதத்தால் பிரிவினை ஏற்பட்டு மோதல்கள் மூண்டு விடாமல் பொறுமை காக்க வேண்டும். சகிப்புதன்மையுடன் செயல்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications