சூரத்தில் இன்றும் ஒரு குண்டு மீட்பு-செயலிழப்பு
Subscribe to Oneindia Tamil

அகமதாபாத் நகரில் நேற்று முன் தினம் 17 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் சிக்கி 49 பேர் உயிரிழந்துள்ளனர். 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந் நிலையில் நேற்று அகமதாபாத்தில் இரண்டு வெடிக்காத குண்டுகளும், சூரத் நகரில் இரு குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் சூரத் நகரில் வெடிப் பொருட்கள் நிறைந்த கார் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந் நிலையில் இன்றும் சூரத் புறநகரான நியூ சிட்டி லைட் பகுதியில் மருத்துவமனை ஒன்றின் அருகே ஒரு வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications