திண்டுக்கல்: சத்துணவு சாப்பிட்ட 105 மாணவர்கள் மயக்கம்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சத்துணவு சாப்பிட்ட 105 பள்ளி மாணவர்கள் வாந்தி மற்றும் மயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் அடுத்துள்ள சீலப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இன்று மதியம் பள்ளி மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டனர். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தனர். திடீரென்று ஒருவர் பின் ஒருவராக 105 மாணவர்கள் மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், மயக்கமடைந்த மாணவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது. உணவில் பல்லி விழுந்ததால்தான் மாணவர்களுக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications