முழுக்க முழுக்க பெண்கள் இயக்கிய ஏர் இந்தியா விமானம்!
சென்னை: முழுக்க முழுக்க பெண்களே இயக்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று சென்னையில் இருந்து சிங்கப்பூர் பறந்தது. முதல் பெண் கமாண்டர் மேலி குரோட்டபள்ளி பைலட்டாக இருந்து விமானத்தை இயக்கினார்.
ஏர் இந்தியா நிறுவனத்தில் 6 பெண் பைலட்டுகள் உள்ளனர். இந்த பெண் பைலட்டுகளில் ஆந்திராவைச் சேர்ந்த மேலி குரோட்டபள்ளி கமாண்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அவருடன் இணை பைலட், பணிப் பெண்கள் என்று முழுக்க முழுக்க பெண்களே இயக்கிய விமானம் நேற்று சென்னையிலிருந்து சிங்கப்பூர் சென்றது.
இதுகுறித்து சமேலி கூறுகையில்,
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முதல் பெண் கமாண்டராக ஆகி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. தந்தை முன்னாள் ராணுவ அதிகாரி. எனது குடும்பத்தினர் ஊக்கமும், உற்சாகமும் அளித்ததால்தான் நான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன். விமானப் பணியில் ஆண், பெண் வேறுபாடு கிடையாது.
ஆண்கள் இல்லாமல் முழுக்க முழுக்க பெண்களே விமானத்தை இயக்கும் நிலை உருவாகியுள்ளது என்றார்.
அவருடன் அம்ரித் நம்தாரி இணை பைலட்டாக இருந்து விமானத்தை இயக்கினார்.












Click it and Unblock the Notifications