தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி தொடரும்-சிபிஎம்
சென்னை: தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் தொடரும். முறிவு என்ற பேச்சுக்கு இடமில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான அணு ஒப்பந்தத்துக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆதரவை விளக்கிக் கொண்டன. மத்திய அமைச்சரவையில் திமுகவும் இடம் பெற்றிருப்பதால் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வரதராஜன் கூறியதாவது: தமிழகத்தில் திமுக அரசை கடந்த 2 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகள் ஆதரித்து வருகின்றன. திமுக அரசு மக்களுக்கு ஆற்றி வரும் நல்ல காரியங்களை நாங்கள் பாராட்டி வருகிறோம். அதேசமயம் மக்களை பாதிக்கும் பிரச்னைகளில் அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில கவுன்சில் கூட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 6, 7ம் தேதிகளில் நடக்கிறது. அந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.
அடுத்த தேர்தலின்போதுதான் கூட்டணி குறித்து பேசுவோம். சீட் பங்கீட்டின் அடிப்படையில் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்.
திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து நீடிப்போம். கூட்டணி முறிவு என்ற பேச்சு தற்போது எழவில்லை என்று கூறினார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 9 எம்எல்ஏக்களும், 2 எம்பிக்களும் உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 எம்எல்ஏக்களும் 2 எம்பிக்களும் உள்ளனர்.
இந்த 15 எம்எல்ஏக்களும் அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற்றாலும் காங்கிரசில் உள்ள 35 எம்எல்ஏக்கள் அரசை ஆதரிப்பதால், ஆளுங்கட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை.
தற்போதைய நிலையில் திமுக உடனான கூட்டணி தொடரும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications