ரியாத்: அதிகாரி அடித்ததில் இந்தியர் சாவு
Subscribe to Oneindia Tamil
ரியாத்: அதிகாரி அடித்ததில் இந்தியர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
கேரளைவைச் சேர்ந்த சுதீஷ் கலாதில் பரம்பில். இவர் ரியாத் அரேகு பராக் என்ற இடத்தில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
தன்னுடன் பணியாற்றும் சக ஊழியருக்கு உதவி செய்வதற்காக சென்றபோது, அவரை சூப்பர்வைசர் தடுத்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சூப்பர்வைசர் சுதீஷை பலமாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சுதீஷ் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 11 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சுதீஷ் பரிதாபமாக இறந்தார்.
இது சக ஊழியர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications