வறுமை-காமராஜர் தங்கை மகளுக்கு கருணாநிதி உதவி
சென்னை: மறைந்த முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் தங்கை நாகம்மாளின் மகள் கமலாதேவி வறுமையில் வாடி வருவதை கருத்தில் கொண்டு அவருக்கு ரூ. 2.5 லட்சம் நிதியுதவியும், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1.5 லட்சம் நிதியுதவியும் அளிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
காமராஜரின் தங்கை நாகம்மாள். இவரது மகள் கமலாதேவி. வறுமையில் வாடி வரும் கமலாதேவியின் நிலை குறித்து செய்திகள் வெளியாகின. இதையடுத்து அவருக்கு நிதியுதவி அளிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
அவருடைய மருத்துவ செலவுகளுக்காக நல்லெண்ண அடிப்படையில் ரூ. 2.5 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ள முதல்வர் கருணாநிதி, கமலாதேவியின் ஏழ்மையைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1.5 லட்சம் நிதியும் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
ரூ. 1.5 லட்சம் நிதி, தமிழ்நாடு மின் கழக நிதிக் கழகத்தில் டெபாசிட் செய்யப்பட்டு அதிலிருந்து மாதந்தோறும் அவருக்கு ரூ. 1000 கிடைக்கும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications