கன மழை- காவிரியில் வெள்ள அபாயம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக காவிரியில் நீர்ப் பெருக்கு அதிகரித்துள்ளது.
ஆடிப் பெருக்கு ஆகஸ்ட் 2ம் தேதி வரவுள்ள நிலையில், காவிரியில் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் கணிசமாக அதிகரித்துள்ளது.
அணைக்கு தற்போது விநாடிக்கு 1030 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 11 ஆயிரத்து 933 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 54.23 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நீர்மட்டம் மழை காரணமாக உயரத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications