டாக்டர் அலட்சியத்தால் மாணவர் மரணம் சாவு

Subscribe to Oneindia Tamil

திருத்துறைப்பூண்டி: நெஞ்சுவலியால் துடித்த மாணவர் மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார். டாக்டர்களின் அலட்சியத்தால்தான் அவர் இறந்ததாக கூறி சக மாணவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கற்கநாதர்குளத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் (21). இவர் ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி அங்குள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.ஸி. விலங்கியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 25ஆம் தேதி இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அன்று இரவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் மாணவர் கோபிநாத் பரிதாபமாக இறந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் டாக்டர்களின் அலட்சியத்தால்தான் கோபிநாத் இறந்தாக கூறுகின்றனர். இதையடுத்து மாணவர்கள் உள்பட 2 ஆயிரம் பேர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். காலை முதல் மாலை வரை இந்த முற்றுக்கைக் போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருவாரூர் கோட்டாட்சியர் மாணவர்களை சந்தித்து சமரசம் செய்தார். அப்போது பணியில் அலட்சியமாக செயல்பட்ட டாக்டர் ஆனந்தி மற்றும் ஊழியர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டாக்டரின் அலட்சியத்தால் இறந்துபோன கோபிநாத் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிகைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கோட்டாட்சியர் உறுதியளித்தார். அதையடுத்து மாணவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக கூறி கலைந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+