குடிபோதையில் பள்ளி வந்த மாணவர்கள் நீக்கம்
செங்கோட்டை: மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் உள்ளது எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இங்கு 2,000ம் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு 10ம் வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்கள் டாஸ்மாக் கடையில் நிற்பதாக ஆசிரியர்களுக்கு தகவல்கள் கிடைத்தது.
ஆனால் எந்த மாணவர்கள் என்று அடையாளம் தெரியாததால் ஆசிரியர்கள் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறினர். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி வகுப்பறையி்ல் சுரேஷ்குமார், இசக்கி கணேஷ் என்ற இரண்டு மாணவர்கள் வாந்தி எடுத்த நிலையில் வகுப்பறையில் படுத்துக் கிடந்துள்ளனர்.
இதைபார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். விசாரித்தபோது, இருவரும் மது அருந்துவிட்டு பள்ளிக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள் இருவரும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications