அனந்தபுரி எக்ஸ்பிரஸில் மர்ம சத்தம்-நிறுத்தம்
திருச்சி: சென்னை - திருவனந்தபுரம் இடையிலான அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், விழுப்புரத்தை தாண்டி வந்து கொண்டிருந்தபோது மர்ம சத்தம் வந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் கால் மணி நேரம் கழித்து ரயில் புறப்பட்டுச் சென்றது.
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு விழுப்புரத்தைத் தாண்டி வந்து கொண்டிருந்தது. அப்போது என்ஜினுக்கு அடுத்துள்ள ஊனமுற்றோருக்கான பெட்டியிலிருந்து மர்ம சத்தம் வந்தது.
இதையடுத்து விழுப்புரம் - கண்டம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் நிறுத்தப்பட்டது.
பின்னர் என்ஜின் டிரைவரும், கார்டும், பிற ஊழியர்களும் இறங்கி ஊனமுற்றோர் இருந்த பெட்டியைப் பரிசோதித்தனர். அப்போது அந்தப் பெட்டியின் படிக்கட்டு காணவில்லை என்பது தெரியவந்தது. அது இரும்பு தூணில் மோதி உடைந்திருக்கலாம். அதனால் சத்தம் ஏற்பட்டிருக்கலாம் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து கால் மணி நேர தாமதத்திற்குப் பின்னர் ரயில் கிளம்பிச் சென்றது.












Click it and Unblock the Notifications