தமிழக அரசின் புதிய ஐடி கொள்கை-30 லட்சம் வேலைவாய்ப்புகளுக்கு இலக்கு

மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைசச்ர் ராஜா முன்னிலையில் இந்த புதிய ஐடி கொள்கையை முதல்வர் வெளியிட்டார்.
அதில், புதிதாக 80 ஆயிரம் நேரடி வேலை வாய்ப்புகள் மற்றும் 20.2 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளை 2011ம் ஆண்டுக்குள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் முதல்வர் பேசுகையில், அறிவு சார் சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம் ஆசியாவிலேயே மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப மையமாக தமிழகம் மாறும்.
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிய மற்றும் விரிவாக்க பணிகளுக்கு ரூ.250 கோடிக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு கட்டமைப்பு தொகுப்புதவி அளிக்கவும், 2 மற்றும் 3ம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் நிறுவனங்களை உருவாக்குவோருக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
இதுதவிர இந்த நிறுவனங்களில் ஊனமுற்றோருக்கு வேலைவாய்ப்பளிக்கும் நிறுவனங்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கே.என். நேரு, தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, டிசிஎஸ் நிறுவன தலைமை நிதி அதிகாரி மகாலிங்கம், எச்சிஎல் நிறுவன தலைமை செயலதிகாரி ஷிவ் நாடார், போலாரிஸ் நிறுவன தலைவர் அருண் ஜெயின், நோக்கியா இந்தியா இயக்குநர் சச்சின் சக்சேனா மற்றும் காக்னிசன்ட், விப்ரோ, சத்யம் கம்ப்யூட்டர்ஸ்,
இன்போசிஸ், டெல், பிளக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிஐஐ தலைவர் மாணிக்கம் ராமசாமி, நாஸ்காம் தலைவர் சோம் மிட்டல், ஐஐடி இயக்குநர் எம்.எஸ். ஆனந்த், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவஹர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications