நாடாளுமன்றம்- குளிர்கால தொடர் ஒத்திவைப்பு?
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ஒத்திவைக்கப் படக் கூடும் என்று தெரிகிறது.
நாடாளுமன்ற விவகாரம் தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் கூடியது. இந்த கூட்டத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் சரத்பவார் ஆகியோர் கூட்டத்துக்கு வராததால் இதுகுறித்து முடிவு எடுக்க முடியவில்லை.
கடந்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பாஜ எம்பிக்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுப்பினர். கூட்டத் தொடரின்போது எதிர்கட்சியான பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுக்கும். தற்போதுள்ள சூழலில் இதைத் தவிர்க்க கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப் படக்கூடும்.
மேலும், பெங்களூர், அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைக் காரணம் காட்டி லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் நெருக்கடி தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே குளிர் கால கூட்டத் தொடரை இப்போது கூட்டுவது உசிதமாக இருக்காது என அரசு கருதுகிறது.
இதுதவிர சுதந்திர தின பாதுகாப்பு மற்றும் கூட்டத் தொடர் பாதுகாப்பை ஒரே நேரத்தில் வழங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே ஆகஸ்ட் 11ம் தேதி நடக்க இருந்த கூட்டத் தொடர் ஆகஸ்ட் 15க்கு பிறகு நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவியிடம் கேட்டபோது, தீவிரவாதிகளின் தாக்குதல் ஒரு தேசிய துயரம் ஆகும். தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு அரசு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது. தீவிரவாத மிரட்டல்களை முறியடிக்க மாநில அரசுகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தார்.
சமாஜ்வாடி கட்சியின் ஆதரவு இருப்பதால் கூட்டத் தொடரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் சமாளிக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. அதேசமயம், எம்.பிக்களுக்கு லஞ்சம், தீவிரவாத தாக்குதல் ஆகியவற்றை கிளப்பி சபையை நடத்த விடாமல் தடுக்க பாஜக முயலும் என்பதால் அதற்கு இடம் கொடுக்க அரசு விரும்பவில்லை என்று தெரிகிறது. எனவே குளிர்காலக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்படும் என்றே தெரிகிறது.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications