தொழிற்சங்கம் கோரி ஹூண்டாய் ஊழியர்கள் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தொழிற்சங்கம் அமைக்க அனுமதி கோரி ஹூண்டாய் கார் கம்பெனி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ளது ஹூண்டாய் கார் தொழிற்சாலை. இங்கு பணியாற்றும் ஊழியர்கள், தொழிற்சங்கம் அமைக்க நிர்வாகத்திடம் பல முறை அனுமதி கோரி வந்தனர். இந்நிலையில் ஊழியர்கள் திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு தொழிற்சங்கம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். காழ்ப்புணர்ச்சி காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஊழியர்கள் முன்வைத்துள்ளனர்.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications