தீவிரவாத மிரட்டலுக்கு போலீஸ் பயப்படாது-டிஎஸ்பி

நெல்லையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் இந்து முண்ணனி தலைவர் ராமகோபாலன், தென்காசி டிஎஸ்பி மயில்வாகனன், மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை குண்டு வீசி கொல்ல தீட்டிய சதி திட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டிஎஸ்பி மயில்வாகனன் கூறுகையில்,
போலீஸ்காரர்கள் யாருக்கும் பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை. நியாயமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவே எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீவிரவாத மிரட்டலுக்கு போலீஸ் என்றுமே பயப்படாது. நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம்.. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று அவர் கூறினார்.
நேரடி தேர்வு மூலம் டிஎஸ்பியானவர் மயில்வாகனன். கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி தென்காசி டிஎஸ்பியாக பொறுப்பேற்றார். இவர் அதிரடியாக பணியாற்றி உயர் போலீஸ் அதிகாரிகளின் பாராட்டை பலமுறை பெற்றுள்ளார்.
இதனால் மயில்வாகனனை நெல்லை மாவட்டத்தின் சென்சிடிவ் ஆன பகுதியில் பணி அமர்த்த வேண்டும் போலீஸ் உயரதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். சமீபத்தில் தென்காசியில் நடந்த ஒரு பிரச்சனையில் முக்கிய பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் டிஎஸ்பி மயில்வாகணன் எதிர்தரப்பையும் வரவழைத்து இரண்டு பேரின் புகார்களையும் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இது தீவிரவாதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால்தான் அவர்கள் டிஎஸ்பி மயில்வாகனனையும் தங்கள் ஹிட் லிஸ்டில் சேர்த்துள்ளனர்.
டிஎஸ்பி மயில்வாகணன் மீது தீவிரவாதிகள் காட்டமாக இருப்பதை முன்கூட்டியே அறிந்த உளவு பிரிவு போலீசார் இதுகுறித்து அவருக்கும் தெரிவித்து உள்ளனர். இதனால் டிஎஸ்பி மயில்வாகணன் அலர்ட்டாக இருந்தார்.
இந்த நிலையில்தான் நெல்லையில் கைதான ஹீரா தங்கள் கொலை பட்டியலில் தென்காசி டிஎஸ்பி மயில்வாணனும் இருப்பதை கூறினார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications