செல்போனை விரும்பாத சிபிஐ இயக்குநர்!
டெல்லி: சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றுள்ள அஸ்வனி குமார் செல் போன்களை விரும்பாதவராக இருக்கிறார். அது எனக்கு தேவைப்படவில்லை என்றும் அவர் விளக்கம் தருகிறார்.
நாடெங்கும் தொழில்நுட்பப் புரட்சி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஏர் உழவர்கள் முதல் ஏரோபிளேனில் போவோர் வரை செல்போன் இல்லாமல் யாரும் இருப்பதில்லை. செல்போன் இல்லாவிட்டால் பலருக்கு வாழ்க்கையே ஸ்தம்பித்துப் போய் விடும்.
அப்படி ஒரு பரபரப்பான மொபைல் உலகில், செல்போன் சாதனமே கருவியே இல்லாமல், அதுவும், மிக மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் ஒருவர் உள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?. அவர்தான் சிபிஐ இயக்குநர் அஸ்வனி குமார்.
செல்போன்களை விரும்பாதவராக இருக்கிறார் அஸ்வனி குமார். ஏன் அப்படி என்று அவரிடம் கேட்டால், உண்மைதான், என்னிடம் செல்போன் கிடையாதுதான்.
அது எனக்குத் தேவைப்படவில்லை. எனவேதான் வைத்துக் கொள்ளவில்லை. பெரும்பாலான நேரங்களில் நான் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கிறேன். அங்கு நிறைய லேன்ட்லைன் போன்கள் இருக்கின்றன.
காரில் போனாலும் கூட அதில், ஒயர்லெஸ் கருவி உள்ளது. அதிலும் என்னைத் தொடர்பு கொண்டு விடலாம். அப்படி இருக்கையில் நான் எதற்கு தனியாக செல்போன் வைத்துக் கொள்ள வேண்டும்.?
இருப்பினும், ஒரு வேளை எதிர்காலத்தில் செல்போன் தேவைப்பட்டால் நிச்சயம் நான் ஒரு செல்போனை வாங்கி எனது பாக்கெட்டில் வைத்துக் கொள்வேன். மற்றவர்களைப் போல எனது பாக்கெட்டும் செல்போன் சகிதம் வளைய வரும் என்றார் அஸ்வனி குமார்.
வித்தியாசமான அதிகாரிதான்.
-
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications