செல்போனை விரும்பாத சிபிஐ இயக்குநர்!
டெல்லி: சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றுள்ள அஸ்வனி குமார் செல் போன்களை விரும்பாதவராக இருக்கிறார். அது எனக்கு தேவைப்படவில்லை என்றும் அவர் விளக்கம் தருகிறார்.
நாடெங்கும் தொழில்நுட்பப் புரட்சி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஏர் உழவர்கள் முதல் ஏரோபிளேனில் போவோர் வரை செல்போன் இல்லாமல் யாரும் இருப்பதில்லை. செல்போன் இல்லாவிட்டால் பலருக்கு வாழ்க்கையே ஸ்தம்பித்துப் போய் விடும்.
அப்படி ஒரு பரபரப்பான மொபைல் உலகில், செல்போன் சாதனமே கருவியே இல்லாமல், அதுவும், மிக மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் ஒருவர் உள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?. அவர்தான் சிபிஐ இயக்குநர் அஸ்வனி குமார்.
செல்போன்களை விரும்பாதவராக இருக்கிறார் அஸ்வனி குமார். ஏன் அப்படி என்று அவரிடம் கேட்டால், உண்மைதான், என்னிடம் செல்போன் கிடையாதுதான்.
அது எனக்குத் தேவைப்படவில்லை. எனவேதான் வைத்துக் கொள்ளவில்லை. பெரும்பாலான நேரங்களில் நான் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கிறேன். அங்கு நிறைய லேன்ட்லைன் போன்கள் இருக்கின்றன.
காரில் போனாலும் கூட அதில், ஒயர்லெஸ் கருவி உள்ளது. அதிலும் என்னைத் தொடர்பு கொண்டு விடலாம். அப்படி இருக்கையில் நான் எதற்கு தனியாக செல்போன் வைத்துக் கொள்ள வேண்டும்.?
இருப்பினும், ஒரு வேளை எதிர்காலத்தில் செல்போன் தேவைப்பட்டால் நிச்சயம் நான் ஒரு செல்போனை வாங்கி எனது பாக்கெட்டில் வைத்துக் கொள்வேன். மற்றவர்களைப் போல எனது பாக்கெட்டும் செல்போன் சகிதம் வளைய வரும் என்றார் அஸ்வனி குமார்.
வித்தியாசமான அதிகாரிதான்.












Click it and Unblock the Notifications