இந்தியாவுக்கு முக்கியமான நாள் - மன்மோகன் மகிழ்ச்சி
கொழும்பு: இந்தியாவுக்கு இது மிக முக்கியமான நாள் என்று ஐஏஇஏ ஒப்புதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு வரைவு ஒப்பந்தத்திற்கு சர்வதேச அணு சக்தி ஏஜென்சி நேற்று ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள பிரதர் மன்மோகன் சிங் கருத்து தெரிவிக்கையில், இது இந்தியாவுக்கு மிக முக்கியமான நாள்.
இந்த செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. சர்வதேச சமுதாயத்துடன் இந்தியாவின் அணு வர்த்தகம் மீண்டும் தொடங்கவிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும், உலகுக்கும் நலம் பயப்பதாக அமையும் என்றார் அவர்.
விலகியது அணுத் தீண்டாமை - கபில் சிபல்:
மத்திய அறிவியல்,தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் கருத்து ெதரிவிக்கையில், இதுவரை இருந்து வந்த அணுத் தீண்டாமையிலிருந்து இந்தியா விலக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மிகவும் சந்தோஷமான தினம்.
இத்தகைய வரலாற்று மாற்றத்தை, திருப்பத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிகழ்த்தியுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications