மிக்சருக்கு காசு கேட்ட வியாபாரியின் காது அறுப்பு!
சென்னை: மிக்சரை வாங்கி தின்று விட்டு காசு கொடுக்க மறுத்த நான்கு பேர், பணம் கேட்ட வியாபாரியின் காதை அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அமைந்தகரை பொன்னுவேல் பிள்ளை தோட்டம் பகுதியில் மிக்சர் கடை வைத்திருப்பவர் ஜாகிர் உசேன். நேற்று இவரது கடைக்கு நான்கு பேர் வந்தனர். மிக்சர் வாங்கி சாப்பிட்டனர்.
சாப்பிட்டு முடித்தவுடன் பேப்பரை சுருட்டி கீழே போட்டு விட்டு நடையைக் கட்டியுள்ளனர்.
இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய ஜாகிர் உசேன், மிக்சருக்கு காசு கேட்டுள்ளார். ஆனால், காசு கொடுக்க மறுத்தனர். ஆனால் காசு கொடுக்காமல் விட மாட்டேன் என ஜாகிர் உசேன் கூறியுள்ளார்.
இதையடுத்ுத ஆத்திரமடைந்த அந்த நான்கு பேரும் தங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து ஜாகிர் உசேனின் காதை அறுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து ரத்தம் கொட்டக் கொட்ட அமைந்தகரை காவல் நிலையம் சென்ற ஜாகிர் உசேன் புகார் கொடுத்தார். உடனடியாக நடவடிக்ைகயில் இறங்கிய போலீஸார், காதை அறுத்த ஆனந்தன், செந்தில், ராஜு, சுரேஷ் ஆகியோரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications