சென்னை விமான நிலையத்தில் கார்களுக்கு தடை
சென்னை: பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை விமான நிலைய பிரதான சாலையில் கார் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் மற்றும் அகமதாபாத் தொடர் வெடிகுண்டு தாக்குதலை அடுத்து தமிழகத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதல் லிஸ்டில் சென்னையும் இடம் பெற்றிருப்பதால் சென்னை மாநகர் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீசார் முழுவதுமாக முடுக்கி விடப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக சென்னை விமான நிலைய வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் உள்ள முதல் பிரதான சாலையில் கார்கள் வந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்களின் கார்களுக்கு மட்டுமே வந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
மற்ற வாகனங்கள் கார் நிறுத்துமிடம் வழியாக உள்ள பிரதான பாதையை பயன்படுத்துமாறு விமான நிலைய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேஸால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. ஆனால் அதில் வெறும் துணிகளும், வாட்ச் மட்டுமே இருந்தது. அதன் பின்னர் அங்கு அமைதி திரும்பியது.












Click it and Unblock the Notifications