சூரிய கிரகணம்: சென்னையில் மேகமூட்டம்-மக்கள் ஏமாற்றம்

நேற்று முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்தியாவில் இது பகுதி சூரிய கிரகணமாக இருந்தது. சென்னையிலும் சூரிய கிரகணம் மாலை 4.41 முதல் 6.08 வரை தெரிந்தது.
இருப்பினும் அப்போது மேக மூட்டமாக இருந்ததால் கிரகணத்தை சரிவர பார்க்க முடியவில்லை. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு பைனாகுலர் மூலம் கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து மக்கள் கூட்டம் சூரிய கிரகணத்தைப் பார்க்க அலை மோதியது. 5 டெலஸ்கோப்கள் மற்றும் வெல்டர் கண்ணாடிகள் 20 ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது. இது போக சன் ஸ்பாட்டர் எனப்படும் கருவியும் வைக்கப்பட்டிருந்தது.
கிரகணத்தைப் பார்க்க கூடியிருந்த பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் என பல தரப்பினரும் கிரகணத்தை சரிவர பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். ஐந்தே கால் மணிக்குத்தான் ஓரளவுக்கு காண முடிந்தது.












Click it and Unblock the Notifications