காதலியை சந்திக்க வெடிகுண்டு புரளி கிளப்பியவர் கைது
சென்னை: காதலியை சந்திக்க வேண்டும் என்பதற்காக அரசுக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் புரளி கிளப்பிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மின்ட் பகுதியில் உள்ள அரசு பாரதி மகளிர் கல்லூரிக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல்விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று கல்லூரி முழுக்க தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் குண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அத்தகவல் வெறும் புரளி எனத் தெரிய வந்தது.
இருப்பினும் மாணவிகள் பீதியில் இருந்ததால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள இன்னொரு கல்லூரி மற்றும் பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
போலீஸார் மற்றும் மாணவ, மாணவியரை தேவையில்லாமல் அலைக்கழித்த வதந்தி பரப்பிய நபரைப் பிடிக்க போலஸீார் வேட்டையை முடுக்கி விட்டனர்.
விசாரணையில் மர்ம வாலிபர் பேசிய செல்போன் நம்பர் கிடைத்தது. அந்த நம்பரில் தொடர்பு கொண்டபோது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர், அந்த நம்பர் குறித்து செல்போன் நிறுவனத்தில் விசாரித்தனர்.
இதில் அந்த எண்ணுக்குரியவர் சென்னை எம்.எம்.டி.ஏ. காலனி மாத்தூரை சேர்ந்த நாகர்ஜுனா (22) என்பது தெரியவந்தது.
இதையடுத்து நாகார்ஜூனாவை மூலக்கடையில் வைத்து போலீஸார் மடக்கினர். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்தான் வெடிகுண்டு புரளியைக் கிளப்பியது எனத் தெரிய வந்தது.
போலீஸாரிடம் நாகார்ஜூனா கூறுகையில், நான் அண்ணாநகர் ஆர்ச் அருகே உள்ள செல்போன் கடையில் வேலை பார்க்கிறேன். பிராட்வேயில் உள்ள பாரதி மகளிர் கல்லூரிக்கு அருகில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவியை கடந்த 2 மாதமாக காதலித்து வந்தேன். அந்த பெண் வியாசர்பாடியை சேர்ந்தவர். நாங்கள் இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்து எங்கள் காதலை வளர்த்து வந்தோம்.
கடந்த இரண்டு நாளாக என்னிடம் அவள் சரியாக பேசவில்லை. இதற்கு காரணம் கேட்பதற்காக காலையில் பள்ளிக்கு அருகே வந்து காத்திருந்தேன். ஆனால், பள்ளிக்கு வந்த அவள் என்னை பார்க்காமல், உள்ளே சென்றுவிட்டாள்.
இதனால், அவளை வெளியே வரவைக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்தேன். அருகில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் வெடிகுண்டு வெடிக்க போவதாக கூறினால், உடனே அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விட்டு விடுவார்கள் என்று நினைத்தேன். அதனால், போலீசுக்கு போன் செய்தேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து வதந்தி பரப்பிய அவரை போலீஸார் கைது செய்தனர்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications