கூகுள் துவங்கும் புதிய முதலீட்டு நிறுவனம்!
நியூயார்க்: கூகுள் நிறுவனம் விரைவில் ஆரம்ப முதலீட்டு நிறுவனம் (venture capital) ஒன்றைத் துவங்கவிருக்கிறது.
கூகுளின் துணைத் தலைவர் டேவிட் டிரம்மண்ட் தலையில் செயல்பட உள்ள இந்த நிறுவனத்துக்கு முழுவடிவம் தரவும், நடைமுறை விதிகளை உருவாக்கவும் முன்னால் தொழிலதிபரான வில்லியம் மாரிஸை அமர்த்தியுள்ளது கூகுள்.
இந்நிறுவனம் எப்படிச் செயல்படப் போகிறது, எந்த மாதிரி நிறுவனங்களில் முதலீடுகளைச் செய்யப் போகிறது என்பதெல்லாம் இன்னும் விவரமாகத் தெரியவில்லை.
இப்படி ஒரு முதலீட்டு நிறுவனத்தைத் துவங்குவதன் மூலம், புதிய நிறுவனங்களுக்குத் தேவைப்படும் ஆரம்ப முதலீடுகளைத் தருவதில், இன்டெல், மோட்டரோலா, காம்காஸ்ட்டுக்கு இணையாக, உலகின் மிகப் பெரிய சாப்ட்வேர் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளும் அவதாரமெடுக்கிறது.
மேலும் ஒரு மிகப்பெரிய பாரம்பரிய முதலீட்டு நிறுவனமாகவும் மாறப்போகிறது.
இன்டர்நெட் துறையில் ஏற்கெனவே வால்ட் டிஸ்னி, அமேஸான் நிறுவனங்கள் கணிசமான புதிய நிறுவனங்களுக்கு ஆரம்ப முதலீடுகளை வழங்கி ஊக்கமளித்து வருகின்றன. இந்தப் பிரிவில் மேலும் புதிய முனைவோர்களைக் கொண்டு வருவதற்காக இந்நிறுவனங்கள் பல விதிமுறைத் தளர்வுகளைக் கொண்டு வந்துள்ளன.
இந்நிலையில் கூகுளின் வருகை மேலும் இத்துறையில் மிகப்பெரிய வளர்ச்சிக்கு வித்திடும் என நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications