பாதுகாப்பு வரைவு ஒப்பந்தத்திற்கு ஐஏஇஏ ஒப்புதல்

இந்தியாவின் வரைவு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தருவதற்கான சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் போர்டு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று வியன்னாவில் தொடங்கியது.
35 நாடுகளின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தைத் தொடங்கி வைத்து அணு சக்தி ஏஜென்சியின் தலைவர் எல் பராதே பேசுகையில், பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவின் வரைவு ஒப்பந்தம் உள்ளது.
இந்தியாவின் தேவைகளை மட்டுமல்லாது அணு சக்தி ஏஜென்சியின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் உள்ளது.
அணு உலைகளின் பாதுகாப்பு தொடர்பான சிறந்த கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளதை இது உறுதி செய்கிறது.
இந்த ஒப்பந்தப்படி இந்தியாவின் 14 அணு உலைகள், ஏஜென்சியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும். 2014ம் ஆண்டுக்குள் இவை ஏஜென்சியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்டும். இவற்றில் 6 அணு உலைகள் ஏற்கனவே அணு சக்தி ஏஜென்சியின் மேற்பார்வையின் கீழ் உள்ளன.
மற்ற அணு உலைகளில் ஏஜென்சியின் கண்காணிப்பு 2009ம் ஆண்டு முதல் தொடங்கும். இதுதொடர்பான நடவடிக்கைளை படிப்படியாக இந்தியா, ஏஜென்சிக்குத் தெரிவிக்கும். ஏஜென்சி தனது உறுப்பினர்களுக்கு இவற்றைத் தெரிவிக்கும்.
அடிஷனல் புரோட்டோகால் குறித்த விவாதங்களை ஏற்கனவே இந்தியாவும், சர்வதேச அணு சக்தி ஏஜென்சியும் தொடங்கி விட்டன என்றார் எல்பராதே.
இதையடுத்து அனைத்து உறுப்பினர்களும் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக ஒரே குரலில் ெதரிவித்ததைத் தொடர்ந்து வரைவு ஒப்பந்தத்தை அணு சக்தி ஏஜென்சி ஏற்றுக் கொண்டது.
அடுத்தது என்எஸ்ஜி, அமெரிக்க நாடாளுமன்றம்:
இதன் மூலம் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறுவதற்கான முக்கிய பணியை இந்தியா வெற்றிகரமாக முடித்துள்ளது. அடுத்து என்.எஸ்.ஜி.யின் ஒப்புதலை இந்தியா பெற வேண்டும். இதையும் வெற்றிகரமாக முடித்து விட்டால் அடுத்து அமெரிக்க காங்கிரஸில் (நாடாளுமன்றத்தில்) ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டு அணு சக்தி ஒப்பந்தம் முறைப்படி அமலுக்கு வரும்.
-
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
சம்பளம் கட், பள்ளிகளுக்கு விடுமுறை, வாகனத்தை இயக்கவே தடை.. ஈரான் போரால் திண்டாடும் பாகிஸ்தான் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications