பாதுகாப்பு வரைவு ஒப்பந்தத்திற்கு ஐஏஇஏ ஒப்புதல்

இந்தியாவின் வரைவு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தருவதற்கான சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் போர்டு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று வியன்னாவில் தொடங்கியது.
35 நாடுகளின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தைத் தொடங்கி வைத்து அணு சக்தி ஏஜென்சியின் தலைவர் எல் பராதே பேசுகையில், பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவின் வரைவு ஒப்பந்தம் உள்ளது.
இந்தியாவின் தேவைகளை மட்டுமல்லாது அணு சக்தி ஏஜென்சியின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் உள்ளது.
அணு உலைகளின் பாதுகாப்பு தொடர்பான சிறந்த கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளதை இது உறுதி செய்கிறது.
இந்த ஒப்பந்தப்படி இந்தியாவின் 14 அணு உலைகள், ஏஜென்சியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும். 2014ம் ஆண்டுக்குள் இவை ஏஜென்சியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்டும். இவற்றில் 6 அணு உலைகள் ஏற்கனவே அணு சக்தி ஏஜென்சியின் மேற்பார்வையின் கீழ் உள்ளன.
மற்ற அணு உலைகளில் ஏஜென்சியின் கண்காணிப்பு 2009ம் ஆண்டு முதல் தொடங்கும். இதுதொடர்பான நடவடிக்கைளை படிப்படியாக இந்தியா, ஏஜென்சிக்குத் தெரிவிக்கும். ஏஜென்சி தனது உறுப்பினர்களுக்கு இவற்றைத் தெரிவிக்கும்.
அடிஷனல் புரோட்டோகால் குறித்த விவாதங்களை ஏற்கனவே இந்தியாவும், சர்வதேச அணு சக்தி ஏஜென்சியும் தொடங்கி விட்டன என்றார் எல்பராதே.
இதையடுத்து அனைத்து உறுப்பினர்களும் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக ஒரே குரலில் ெதரிவித்ததைத் தொடர்ந்து வரைவு ஒப்பந்தத்தை அணு சக்தி ஏஜென்சி ஏற்றுக் கொண்டது.
அடுத்தது என்எஸ்ஜி, அமெரிக்க நாடாளுமன்றம்:
இதன் மூலம் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறுவதற்கான முக்கிய பணியை இந்தியா வெற்றிகரமாக முடித்துள்ளது. அடுத்து என்.எஸ்.ஜி.யின் ஒப்புதலை இந்தியா பெற வேண்டும். இதையும் வெற்றிகரமாக முடித்து விட்டால் அடுத்து அமெரிக்க காங்கிரஸில் (நாடாளுமன்றத்தில்) ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டு அணு சக்தி ஒப்பந்தம் முறைப்படி அமலுக்கு வரும்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications