ஜம்மு கலவரம்-நாளை பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மூவில் கலவரம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருப்பதையடுத்து அவரசமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

அமர்நாத் புனிதத் தலத்துக்கு நிலம் வழங்கியது, பின்னர் அதை வாபஸ் பெற்றதில் ஏற்பட்ட பிரச்சனை ஓயவில்லை. இதனால் நடந்து வரும் தொடர் கலவரங்களை கட்டுப்படுத்த ஜம்மூவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பி்க்கப்பட்டது.

இருப்பினும் வன்முறை ஓயவில்லை. இதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த இரண்டா பட்டாலியன் மத்தியப் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.

நேற்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 பேர் பலியானர். இதையடுத்து இரு மூத்த அதிகாரிகளை ஜம்மூவுக்கு அனுப்பி வைத்துள்ளார் பிரதமர்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அனைத்துக் கட்சி்க் கூட்டத்தை நாளை பிரதமர் கூட்டியுள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட முக்கிய தேசிய கட்சிகள் தவிர காஷ்மீரி் முக்கிய கட்சிகளான தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிலைமைக் கட்டுக்குள் கொண்டு வர பாஜகவி்ன் உதவியை பிரதமர் கோரக் கூடும் எனத் தெரிகிறது. ஜம்மூவில் இந்தக் கட்சி தான் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+