பெருகும் இந்தியர் எண்ணிக்கை-மலேஷிய அரசு கவலை!

இதுகுறித்து ஆளும் பாரிசான் நேஷனல் அரசில் இடம் வகிக்கும் மலேஷிய இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோ சாமிவேலு கூறியிருப்பத்தாவது:
கோலாலம்பூர் நகரில் மொத்த மக்கள் தொகையான 25 லட்சத்தில் 3.2 லட்சம் பேர் இந்தியர்கள் எனத் தெரிவித்துள்ளது.
மலேஷியாவில் தொடர்ந்து இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் அவர்களுக்கான வசிதகளைச் செய்து தருவதில் நடைமுறைப் பிரச்சினைகள் நிறைய உள்ளன.
மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரை அனைத்து வசதிகளும் நிறைந்த மிகச்சிறந்த சர்வதேச நகரமாக்கும் 'கோலாலம்பூர் புனரமைப்புத் திட்டம் 2020ன் படி, 1 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களை மட்டுமே கணக்கிட்டு திட்டங்கள் தீட்டப்பட்டன.
ஆனால் இப்போது பெருகியுள்ள மக்கள் தொகைக்கேற்ப இதில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கிறது, என்றார் சாமிவேலு.
இதற்காக மலேசிய இந்திய காங்கிரஸ் சில பரிந்துரைகளையும் முன் வைத்துள்ளது.
மேலும் மலேசியாவில் உள்ள தமிழர்களுக்கு கல்வி வசதி அளிக்க கூடுதல் தமிழ் பள்ளிகளைத் திறக்கவும், மோசமான குடியிருப்புகளில் வசிக்கும் தமிழர்களுக்கு நல்ல குடியிருப்பு வசதிகளைச் செய்து தரவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக சாமிவேலு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications