சீனாவில் மீண்டும் நிலநடுக்கம்
பெய்ஜிங்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில்ல் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சீனாவின் சிச்சுவான் மற்றும் கன்ஸூ மாகாணங்களில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்தும் லுவலகங்களில் இருந்தும் வெளியேறினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
பீஜிங்கின் தென் கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனால் சேத விவரம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஒலிம்பிக் சுடர் பயணம் சிச்சுவான் மாகாணம் வழியாக இன்று காலை நடந்தது குறிப்பிடத்தக்கது. பெய்ஜி்ங்கில் வரும் 8ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவது அங்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2ம் தேதி சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 6.1 புள்ளிகளாக பதிவானது. சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் செங்க்டுவிலும் அதிர்வு உணரப்பட்டது. இதில் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடந்த மே 12ம் தேதி சிச்சுவான் மாகாணம் உள்பட சீனாவில் பல பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 69,000 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications