பிஇ-தொழில்கல்வி மாணவர்களுக்கு 11ம் தேதி கவுன்சிலிங்
சென்னை: பிளஸ் டூவில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான மூன்றாம் கட்ட கவுன்சிலிங் 11ம் தேதி நடக்கிறது.
முன்னதாக வெளி மாநில மாணவர்களுக்கான முதற் கட்ட கவுன்சிலிங் ஜூலை 9ம் தேதி நடந்தது. இதையடுத்து இந்தப் பிரிவில் இருந்த காலியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் கடந்த 2, 3 ஆகிய தேதிகளில் நடந்தது.
இந்த கவுன்சிலிங்குகள் மூலம் வெளிமாநில மாணவர் பிரிவில் 6 இடங்களும், தொழிற்கல்வி மாணவர் பிரிவில் 73 இடங்களும் நிரப்பப்பட்டன.
இப்போது வெளிமாநில மாணவர் பிரிவில் 15 இடங்களும், தொழிற்கல்வி மாணவர் பிரிவில் 377 இடங்களும் காலியாக உள்ளன.
இதையடுத்து தொழிற்கல்வி மாணவர்களுக்கு காலியாக உள்ள இடங்களுக்கு மூன்றாம் கட்ட கவுன்சிலிங் வரும் 11ம் தேதி நடக்கவுள்ளது.
அதே போல வெளிமாநில மாணவர்கள் பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கு இன்னொரு நாளில் கவுன்சிலிங் நடக்கும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications