அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கொலை செய்த வாலிபரை போலீசார் உடனே கைது செய்தனர்.

அமெக்காவின் அரிஸோனோ நகரில் வசித்தவர் இந்தர்ஜித் ஜஸ்ஸல் (62). அங்குள்ள பல்பொருள் கடையில் கிளார்க்காக வேலை பார்த்து வந்தார்.

அந்த கடைக்கு ஆப்பிரிக்க-அமெரிக்க வாலிபரான ஜெர்மைன் கனடா (27) என்பவர் கையில் ஒரு குழந்தையுடனும், இன்னொரு சிறுவனை அழைத்துக் கொண்டும் கடைக்கு வந்தார்.

இந்தர்ஜித்திடம் பேசிக் கொண்டிருந்த அவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டார் இதில் இந்தர்ஜித் அந்த இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் ஜெர்மைன் கனடாவை உடனே சுற்றி வளைத்து கைது செய்தனர். கிரிமினல் குற்றவாளியான ஜெர்மைன் கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் விடுதலையானார். அவர் மீது போதை மருந்து பிரயோகம், தாக்குதல், ஆயுதங்களை தவறாக பயன்படுத்தியது உள்பட பல வழக்குகள் உள்ளன.

'இந்தர்ஜித்தை கொலை செய்யும் நோக்குடன் ஜெர்மைன் இதை செய்யவில்லை. அங்கிருந்த வீடியோ கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்தால், இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.

அது சண்டைப்போட்டுக் கொண்டதாகவோ, விவாதமாகவோ தெரியவில்லை. அவர்களுக்குள் முன் விரோதம் இருப்பதாக தெரியவில்லை. ஜெர்மைன் திடீரென்று துப்பாக்கியால் இந்தர்ஜித்தை சுட்டு கொன்றுள்ளார். போதையில் இந்த கொலையை செய்தாரா என்பது தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+