அப்துல் கபூர், ஹீராவின் சென்னை இருப்பிடங்களில் ரெய்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் அப்துல் கபூர், ஹீரா ஆகியோர் தங்கியிருந்த வீடுகளில் இன்று நெல்லை போலீஸார் ரெய்டு நடத்த உள்ளனர்.
நெல்லை, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆகஸ்ட் 1 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பெரும் நாச வேலைகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்த சதியை முறியடித்த போலீஸார், இதுதொடர்பாக அப்துல் கபூர், ஹீரா உள்ளிட்டோரைக் கைது செய்துள்ளனர்.
நெல்லையில் வைத்து இவர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்துல் கபூர், ஹீரா ஆகியோர் சென்னையில் தங்கியிருந்த வீடுகளில் சோதனை நடத்த நெல்லை போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான அனுமதியை நெல்லை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதையடுத்து தி.நகர் ரங்கநாதன் தெருவில் கபூர் தங்கியிருந்த வீடு, மண்ணடியில் ஹீரா தங்கியிருந்த வீடு ஆகியவற்றில் இன்று சோதனை நடத்தப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications