ஒருவழியாய் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும் தங்கபாலு
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக தங்கபாலு பொறுப்பேற்ற பின் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று சத்தியமூர்த்தி பவனில் கூட்டப்பட்டுள்ளது.
தங்கபாலு தலைவராக நியமிக்கப்பட்டதற்கு வாசன், இளங்கோவன் உள்ளிட்ட பல கோஷ்டிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வாசன் கோஷ்டியினர், பல இடங்களில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கொடியை ஏற்றி தங்கபாலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகியும் கூட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தை தங்கபாலு கூட்டாமல் இருந்து வந்தார். காரணம், அதில் பெரும்பாலானவர்களுக்கு அவருக்கு எதிராக உள்ளது தான்.
இந் நிலையில் முதல் முறையாக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை சத்தியமூர்த்தி பவனில் கூட்டியுள்ளார். நாளை (9ம் தேதி) வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியதை நினைவுகூரும் விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து விவாதிக்கவும், மாநில நிர்வாகிகள் நியமனம் குறித்துப் பேசவும் இக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இக் கூட்டத்திற்கு சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் தலைமை வகிக்கிறார்.
கோஷ்டிகளின் வேட்டிகள் பத்திரம்...!












Click it and Unblock the Notifications