எதிஹாத் ஏர்வேஸ்: அபுதாபி-சென்னை விமான சேவை
அபுதாபி: அபுதாபி-சென்னை இடையே விமான சேவையை தொடங்கியுள்ளது எதிஹாத் ஏர்வேஸ்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 7 மாநிலங்கள் உள்ளன. இதன் தலைநகரம் அபுதாபி. அபுதாபியில் தமிழர்களும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இருந்தபோதும், அபுதாபியிலிருந்து சென்னைக்கு விமானப் போக்குவரத்து இல்லாமலிருந்தது.
இந் நிலையில் அபுதாபியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'எதிஹாத் ஏர்வேஸ்' நிறுவனம் அபுதாபயிலிருந்து சென்னைக்கு விமான சேவையை தொடங்கியுள்ளது.
கடந்த 1ம் தேதி முதல் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
புதன், வெள்ளி, ஞாயி்ற்றுக்கிழமைகளில் அபுதாபியிலிருந்து காலை 8.50 மணிக்குப் புறப்படும் விமானம் பகல் 2.30 மணிக்கு சென்னையை வந்தடைகிறது.
திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பகல 1.45 மணிக்குப் புறப்படும் விமானம் இரவு 7.25க்கு சென்னை வந்து சேருகிறது.
சென்னையிலிருந்து புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3.15க்கு புறப்படும் விமானம் மாலை 5.45 மணிக்கு அபுதாபி சென்றடைகிறது.
திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இரவு 8.20 மணிக்கப் புறப்படும் விமானம் இரவு 10.50க்கு அபுதாபி சென்றடைகிறது