சென்னை விமான நிலையத்தில் மர்ம சூட்கேஸால் பீதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த மர்ம சூட்கேஸால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையத்தின் நுழைவாயிலில் இன்று காலை ஒரு சூட்கேஸ் கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற பீதி ஏற்பட்டது.
இதையடுத்து மோப்ப நாய்கள் சகிதம், வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர். அந்த சூட்கேஸைக் கைப்பற்றி சோதனையிட்டனர். ஆனால் அந்த சூட்கேஸில் எந்தப் பொருளும் இல்ைல. இதனால் வெடிகுண்டு பீதி அகன்றது.
இச்சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் விமான நிலையம் அல்லோகல்லப்பட்டுப் போனது.












Click it and Unblock the Notifications