மீண்டும் கட்சி வேண்டாம் - கிராமத்தில் செட்டிலாவேன்: சோம்நாத்
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்: சபாநாயகர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சொந்த கிராமத்திற்குப் போய் செட்டிலாகப் போகிறேன் என்று மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க சோம்நாத் சாட்டர்ஜி அங்கு சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர முயற்சிக்க மாட்டேன்.
சபாநாயகர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் எனது சொந்த கிராமத்திற்குச் சென்று செட்டிலாகப் போகிறேன். தீவிர அரசியலிலிருந்தும் ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளேன்.
நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தினம்தான் எனது வாழ்க்கையில் மிகவும் மோசமான தினமாகும் என்றார் சோம்நாத்.












Click it and Unblock the Notifications