வாக்கு சேகரிப்பு?-விவசாயிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்!

லோக்சபா தேர்தலில் விவசாயக் கடன்தள்ளுபடியை முக்கிய பிரசாரமாக வைக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளதையே இது காட்டுகிறது.
இதுகுறித்து லக்னோவில் திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரூ. 70 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயக் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதை விளக்கி, விவசாயிகளின் ஆதரவை கோரும் வகையில் அனைத்து விவசாய பயனாளிகளுக்கும் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதங்களை காங்கிரஸார் ஒவ்வொரு விவசாயிடமும் நேரடியாக கொண்டு சேர்ப்பார்கள் என்றார்.
விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தை விவசாயிகளிடம் நேரடியாக தெரிவித்து அவர்களின் ஆதரவைப் பெறும் நோக்கமே இந்த கடிதம் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் எதிர்க்கட்சியினரின் பிரசாரத்தை முறியடிக்க முடியும் எனவும் காங்கிரஸ் நம்புகிறது.
இதுதவிர விவசாயிகளுக்காக செய்யப்பட்டுள்ள நலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் பிரதமர் தனது கடிதத்தில் விளக்கியுள்ளாராம்.
இதை விட அதிரடியாக உ.பி. மாநிலத்தில் ஒரு திட்டத்தை காங்கிரஸ் கையில் வைத்துள்ளது. அதாவது விவசாயக் கடன் தள்ளுபடியால் பலனடைந்த விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு அல்லது 3 பேரை காங்கிரஸ் கட்சியில் சேர்க்கும் திட்டம்தான் அது.
உ.பியில் சமாஜ்வாடி கட்சியுடன் கை கோர்த்துள்ள காங்கிரஸ், விவசாயிகளை காங்கிரஸ் பக்கம் ஈர்த்தால் பெருவாரியான வாக்குகளை அள்ள முடியும் என கணக்கிட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications