பாளை சிறையில் பெண் விசாரணை கைதி சாவு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: பாளை கொக்கிரகுளம் சிறையில் விசாரணைக்காக அடைக்கப்பட்ட ஒரு பெண் கைதி திடீர் மரணம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பாறையடி புத்தேரியை சேர்ந்த முருகேசனின் மனைவி மணி என்ற ஏசுமணி. இவர் வள்ளியூரில் நடைபெற்ற திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கொக்கிரகுளம் மகளிர் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.
ரத்த அழுத்த நோயினால் அவதிப்பட்டு வந்த ஏசுமணி திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் போலீசார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இதுகுறித்து பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications