அடுத்த மாதம் முதல் சென்னை விமான நிலைய விரிவாக்க பணி
டெல்லி: சென்னை விமான நிலைய விரிவாக்கம் அடுத்த மாதம் தொடங்கும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறினார்.
நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், விமான பயணிக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள், குறைகளை நிவர்த்தி செய்ய விசாரணை அதிகாரியை நியமிப்பது, விமான நிலையங்களில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது, வடகிழக்கு மாநிலங்களுக்கு விமான போக்குவரத்து தொடங்குவது போன்ற பிரச்சனைகள் குறித்தும், ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் இணைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்க பின்னர் அமைச்சர் பிரபுல் படேல் கூறியதாவது: சென்னை, கோல்கத்தா விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும் இப்பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படும்.
விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டம் குறித்து ஆராய பிரதமர் மன்மோகன் சிங் குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்த குழு இம்மாதம் 14ம் தேதி அறிக்கையை பிரதமரிடம் அளிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications