18,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை-முன்கூட்டியே முடியும் கவுன்சிலிங்
சென்னை: பொறியியல் கவுன்சிலிங்குக்கு மாணவர்கள் பெருமளவில் கலந்து கொள்ளாததால், திட்டமிட்ட நாட்களுக்கு நான்கு நாள் முன்னதாகவே கவுன்சிலிங் முடிவடைகிறது.
அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி என்ன்ஜினியரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை கவுன்சிலிங்கை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
ஜூலை மாதம் 11ம் தேதி கலந்தாய்வு தொடங்கியது. முதல் கட்ட கவுன்சிலிங் முடிந்து 2வது கட்ட கவுன்சிலிங் தற்போது நடந்து வருகிறது. இதுவரை 53,938 இடங்கள் நிரம்பியுள்ளன. மொத்த இடங்கள் கிட்டத்தட்ட 82 ஆயிரம் ஆகும்.
கவுன்சிலிங்கில் பங்கேற்க 72 ஆயிரத்து 517 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதில் 54 ஆயிரத்து 216 பேர் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர். 278 பேர் கலந்தாய்வில் பங்கேற்றுவிட்டு பின்னர் அப்படிப்பில் சேரவில்லை.
கடந்த ஒரு மாதமாக நடந்த கலந்தாய்வில் இதுவரை 18 ஆயிரத்து 301 பேர் கலந்து கொள்ளவில்லை. கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்கள் ஐஐடி மற்றும் சிறந்த என்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர். முதல் கட்ட கவுன்சிலிங்கில் அரசு மற்றும் சிறந்த சுயநிதி கல்லூரிகள் நிரம்பிவிட்டன.
தற்போதைய நிலவரப்படி 54,000 இடங்கள் பூர்த்தியாகி விட்டன. இன்னும் 29,000 இடங்கள் மட்டும் இருக்கின்றன. இதற்கு 45,000 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 20,000 சீட்டுகள் நிரம்ப வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு போல 10,000 இடங்கள் காலியாக இருக்கும். 3வது கட்ட கவுன்சிலிங் 16ம் தேதி தொடங்குகிறது. 31ம் தேதி வரை கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போதைய நிலவரப்படி கணக்கிட்டால் 26ம் தேதி வரைதான் கவுன்சிலிங் நடக்கும்.
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் துணை தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் எத்தனை பேர் என்று இன்னும் முழுமையான தகவல் வரவில்லை. அதனால் துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு கவுன்சிலிங் 31ம் தேதிக்குள் ஏதாவது ஒருநாள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திட்டமிட்ட தேதிக்குப் பதிலாக, 4 நாட்களுக்கு முன்பே இந்த ஆண்டு கவுன்சிலிங் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications