எஸ்ஆர்எம் பல்கலை விசிட்டிங் புரபசர் கலாம்!
சென்னை: சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக (எஸ்.ஆர்.எம்) கெளரவப் பேராசிரியராக பணியாற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் ரங்கசாமி, பல்கலைக்கழக ஆய்வு பிரிவு தலைமை ஆலோசகர் மற்றும் இயக்குநரான எஸ்.தியாகராஜன் ஆகியோர் டெல்லி சென்று பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாச்சலத்தின் கோரிக்கையை கலாமிடம் தெரிவித்தனர். இந்தக் கோரிக்கையை கலாம் ஏற்றுக் கொண்டதாக பல்கலைக்கழக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மருத்துவம் மற்றும் பாராமெடிக்கல் பிரிவுகளில் பி.எச்.டி. ஆய்வு மாணவர்களுக்கு அப்துல் கலாம் வகுப்பெடுப்பார். ஏற்கனவே டெலிமெடிசன் மற்றும் இ கவர்னன்ஸ் பிரிவில் ஒரு பி.எச்.டி. மாணவர், கலாமின் கீழ் ஆய்வு செய்ய பதிவு செய்துள்ளார்.
இளம் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பாரா மெடிக்கல் மாணவர்களிடையே உரையாடவும், அவர்களுக்கு ஆய்வுக்குரிய ஊக்கத்தைக் கொடுக்கவும், இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கலாம் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 1ம் தேதி தனது முதல் வகுப்பை அப்துல் கலாம் எடுக்கவுள்ளதாகவும் பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications