ம.பி: நந்தி, சிவன் சிலைகள் பால் குடிப்பதாக பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
போபால்: மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநில கிராமங்களில் சிவன் மற்றும் நந்தி சிலைகள் பால் குடிப்பதாக பரவிய செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.
சில வருடங்களுக்கு முன்பு விநாயகர்சிலைகள் பால் குடித்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் சாகர், மண்ட்லா, பர்வானி மற்றும் சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டங்களில் சிவன் மற்றும் நந்தி சிலைகள் பால் குடிப்பதாக செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள சிலைகள் பால் மட்டுமல்லாமல் தண்ணீரும் குடிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து இந்த மாவட்டங்களில் சிவன், நந்தி சிலைகளுக்கு பால், தண்ணீர் கொடுக்க கூட்டம் அலை மோதுகிறது. கோர்பா மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications