ஒகேனக்கல்-முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட எதியூரப்பா கோரிக்கை
டெல்லி: ஒகேனக்கல் பிரச்சனை உள்பட அண்டை மாநிலங்களுடான பிரச்னைகளுக்கு தீர்வு காண முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக திட்ட ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் எடியூரப்பா டெல்லி சென்றார். அங்கு அவர் கூறியதாவது:
காவிரி படுகையில் பாசனத் திட்டங்களை மேற்கொள்ள என்த நிபந்தனையும் இல்லாமல் நிதி ஒதுக்குமாறு திட்டக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போது சிறிய நீர்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானாலும் காவிரி நடுவர் மன்றத்தின் அனுமதியை பெற வேண்டியுள்ளது.
ஒகேனக்கல் யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிக்க கூட்டு சர்வே நடத்தப்பட வேண்டும். கூட்டு சர்வே நடத்துவதற்கு முன் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று தமிழக முதல்வர் கருணாநிதியிடம் திட்டவட்டமாக கூறியுள்ளேன்.
இதுதொடர்பாக தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகனை கர்நாடக நீர்பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
மகாராஷ்டிர மாநிலம் கொய்னா அணையில் இருந்து 2 லட்சம் கன அடிக்கு மேல் கிருஷ்ணா ஆற்றில் நீரைத் திறந்து விடுவதால் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்தும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முறையிடப்பட்டது.
இதுபோன்ற அண்டை மாநில பிரச்னைகளுக்குத் தீர்வுகாண அண்டை மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications