ராஜ்யசபா எம்.பியாக ரங்கராஜன் நியமனம் - அடுத்து அமைச்சர்?
டெல்லி: சமீபத்தில் பிரதமருக்கான பொருளாதார ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்த சி.ரங்கராஜன் நேற்று ராஜ்யசபா நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அவர் மத்திய அமைச்சராகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், பின்னர் ஆந்திர மாநில ஆளுநராகவும் இருந்தவர் நிதித்துறை நிபுணரான சி.ரங்கராஜன். ஆந்திர மாநில ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் பிரதமருக்கான பொருளாதார
ஆலோசனைக் கவுன்சிலின் தலைவராக பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனது பதவியை ரங்கராஜன் ராஜினாமா செய்தார். அவர் எம்.பியாக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அதன்படி நேற்று ராஜ்யசபா நியமன உறுப்பினராக ரங்கராஜன் நியமிக்கப்பட்டார்.
நிர்மலா தேஷ்பாண்டே மறைவினால் காலியாக இருந்த இடத்தில் ரங்கராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் ரங்கராஜன் அமைச்சர் பதவியில் அமர்த்தப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பொருளாதாரத் துறைநிபுணரான ரங்கராஜன் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
12வது நிதிக் கமிஷனின் தலைவராகவும் இருந்துள்ளார். பத்மபூஷன் விருதையும் பெற்ற பெருமைக்குரியவர்.
எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ரங்கராஜன் கூறுகையில், நாடாளுமன்றத்தில் பொருளாதாரத் துறை குறித்த விவாதங்களின்போது எனது கருத்துக்களை எடுத்து வைப்பேன். நாட்டில் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆதரவு தருவேன் என்றார்.
பொருளாதாரத் துறை கவுன்சில் தலைவராக இருந்தபோது, சிறப்பு பொருளாதார மண்டலம், பெட்ரோலியப் பொருள் விலை நிர்ணயம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் ரங்கராஜன் அரசுக்கு ஆலோசனைகள் கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications