தெலுங்கானாவை ஆதரித்தால் சிரஞ்சீவியுடன் கூட்டணி: விஜயசாந்தி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலத்தை சிரஞ்சீவி ஆதரித்தால் அவரது கட்சியுடன் கூட்டணி சேரத் தயாராக இருப்பதாக தல்லி தெலுங்கானா கட்சி தலைவியும், நடிகையுமான விஜயசாந்தி கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது: ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று நான் பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். இதற்காகத்தான் என் கட்சிக்கு தல்லி தெலுங்கானா என்று பெயர் வைத்தேன்.

தற்போது தெலுங்கானா தனி மாநிலத்திற்காக போராடும் கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன. இது நல்லதல்ல. தெலுங்கானாவை ஆதரிக்கும் கட்சிகள் ஒரு அணியாக செயல்பட்டால்தான் தனி மாநிலத்தை பெற முடியும்.

தெலுங்கானாவை ஆதரிப்பதாக பாஜக கூறியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது பற்றி குறிப்பிட வேண்டும். இதுபற்றி நான் அத்வானி, வெங்கையாநாயுடு ஆகியோரை டெல்லியில் சந்தித்து பேசினேன். எனது கோரிக்கையை அவர்கள் பரிசீலிப்பதாக கூறினார்கள்.

சிரஞ்சீவி விரைவில் கட்சி தொடங்குகிறார். அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். சிரஞ்சீவி தெலுங்கானா தனி மாநிலத்தை ஆதரித்தால் அவரது கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தயார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+