வெடிகுண்டு புரளி-பிஎஸ்என்எல் ஊழியர் கைது

நெல்லை மாவட்டம் தீவிரவாதிகளின் டார்கெட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து நெல்லையில் உச்சகட்ட பாதுகாப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பள்ளிகளில் வெடிகுண்டு புரளி கிளப்பப்படுவதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் தென்காசி காவல் நிலையத்திற்கு ஒரு மர்ம போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், குற்றாலம் சாரல் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலைவாணர் கலையரங்கில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் வெடித்து சிதறும். முடிந்தால் தடு்த்து பாருங்கள். சுதந்திர தினவிழாவிற்குள் எங்கேயாவது வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு சொல்லி போனை வைத்து வி்ட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனை கலைவாணர் கலையரங்கிற்கு போலீஸார் விரைந்தனர். அங்கு பொதுமக்களிடையே பீதி ஏற்படாத வகையில் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், குற்றாலத்தைச் சேர்ந்த குமார கணேசன் என்பவரை கைது செய்தனர். இவர் செங்கோட்டை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
இதுகுறித்து நெல்லை எஸ்பி தினகரன் கூறும்போது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications