'காயின் பாக்ஸ்'களுக்கு 15ம் தேதி வரை தடை
நெல்லை: நெல்லையில் வரும் 15ம் வரை காயின் பாக்ஸ் போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் அப்துல் கபூர், ஹீரா மற்றும் அலி அப்துல்லா கைது செய்யப்பட்டு நெல்லை விசாரிக்கப்பட்டனர். நெல்லையிலும் சென்னையிலும் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெடிகுண்டு தாக்கதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து நெல்லையில் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வந்தது. அது புரளி என்று தெரிந்த பிறகும் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில் காயின் பாக்ஸ் போனுக்கு போலீசார் 3 நாள் தடை விதித்துள்ளனர். நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை காயின் பாக்ஸ் போன்களை வைக்க வேண்டாம் என்றும் அப்படி வைத்தால் போன் செய்ய வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் நெல்லை காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் மூலம் அப்பகுதிகளில் உள்ள தொலைபேசி உரிமையாளர்களுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications