கர்நாடகத்தில் கன மழை-ஓகனேக்கலில் வெள்ளம்
ஓகனேக்கல்: கர்நாடக அணைகளிலிருந்து பெருமளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஓகனேக்கல் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ளக் காடாகியுள்ளது. காவிரிக் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த சிலநாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. ஏற்கனவே ஹோரங்கி, கபிணி ஆகிய அணைகள் நிரம்பி விட்டன.
தற்போது கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பும் தருவாயை எட்டியுள்ளது. மொத்தம் 123 அடி கொள்ளளவு உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை தற்போது 122 அடியை எட்டியுள்ளது.
இதன் காரணமாக கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகரிலிருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக ஓகனேக்கலுக்கு பெருமளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அங்குள்ள அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஓகனேக்கலிலும் மழை பெய்துவருவதால் அங்கு வெள்ளக் காடாகியுள்ளது. இதனால் பரிசல் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கரையோரங்களில் வசிப்போர் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இனறு மாலை முதல் மேட்டூர் அணைக்கு பெருமளவில் நீர்வரத்து இருக்கும் என்பதால் மேட்டூர் அணையும் ேவகமாக நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications