திருச்சி மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 20ம் தேதி நடக்கிறது.
திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் ஸ்வாமி கோவில் உள்ளது. அந்த வளாகத்திலேயே அருள்மிகு மாணிக்க விநாயகர் கோவிலும் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது. ரூ.3 கோடி செலவில் கோவில் கோபுரத்துக்கு தங்கக் கவசமும் போடப்பட்டுள்ளது.
இதையடுத்து வரும் 20ம் தேதி மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த விழாவில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பன், அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சுந்தரராஜலு மற்றும் செயல் அலுவலர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications