பிஎஸ்என்எலை புறக்கணித்த தெற்கு ரயில்வே
சென்னை: அலுவலர்களுக்கு செல்போன் இணைப்பு வழங்கும் உரிமையை ஏர்டெல் நிறுவனத்துக்கு அனுமதித்து, பிஎஸ்என்எல் நிறுவனத்தை புறக்கணித்துள்ளது தெற்கு ரயில்வே.
கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் சுமார் 5,000 அலுவலர்களுக்கு முதன் முறையாக செல்போன் இணைப்பு வழங்கப்பட்டது.
இதில் சென்னை மற்றும் தமிழகம், புதுச்சேரி தொலைத் தொடர்பு வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரயில்வே அலுவலர்கள் 3,050 பேருக்கு செல்போன் இணைப்புக்கான சிம்கார்டுகளை பிஎஸ்என்எல் வழங்கியது.
இந்த சிம்கார்டுகளைப் பெற்றுள்ள தெற்கு ரயில்வே அலுவலர்கள், தங்களுக்குள் கட்டணம் மற்றும் கால வரம்பின்றி தொடர்பு கொண்டு பேசும் வகையில் ஒருங்கிணைந்த "விடிஎன்-சியூஜி' வசதியைப் பெற்றனர்.
மேலும் இதர செல்போன் இணைப்புகளுடன் மாதம் தோறும் ரூ.300 வரை பேசுவதற்கும் சலுகை அளிக்கப்பட்டது. இந்த பிளான் 525 திட்டத்தின் கீழ் ரயில்வே அலுவலர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளையும் பிஎஸ்என்எல் வழங்கியது.
இந்நிலையில், கடந்த ஜூலை தொடக்கத்தில் பிஎஸ்என்எல் வழங்கிய சேவையை தெற்கு ரயில்வே முடிவுக்குக் கொண்டு வந்தது. இதையடுத்து ஜூலை 7ம் தேதி முதல் தனது அலுவலர்களுக்கு சிம்கார்டுகளை வழங்குமாறு ஏர்டெல் நிறுவனத்துக்கு தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியது. இது பிஎஸ்என்எல் நிறுவத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கட்டண விகிதம் அதிகமாக இருப்பதை காரணமாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கட்டண விகிதத்தை குறைக்கவும் பிஎஸ்என்எல் முன்வந்தது.
ஆனால், ரயில்வே வாரியத்தின் உத்தரவின்பேரில், சிம்கார்டு வழங்க ஏர்டெல் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தங்களது நிலையைத் தெரிவித்தனர்.
இதனால், ரயில்வே துறை மூலம் கிடைக்கும் ரூ.3 கோடியை பிஎஸ்என்எல் இழந்துள்ளது. அரசுத் துறைகளே ஒன்றுக்குள் ஒன்று புறக்கணித்திருப்பது அதிர்ச்சியளிப்பாதாக இருதரப்பு ஊழியர்களும் தெரிவித்துள்ளனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications